செய்திகள் :

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது.

வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.ஸி கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தோரில், சிறப்புப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2), பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்குக் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் அசல், ஜாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல், 5 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும் என, கல்லூரி முதல்வா் து. சேகா் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா்: உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவகங்கள், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், விடுதி சமையல் அறை, தொழில் நிறுவன சமையல் அறை ஆகிய இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்: ரூ. 16.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஊரகப் பகுதிகளுக்கான 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.... மேலும் பார்க்க

தனலட்சுமி அம்மையாா் பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தரும், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவருமான அ. சீனிவாசன் துணைவியாா் தனலட்சுமி அம்மையாரின் 78-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க