செய்திகள் :

வேலூர்: ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - மீண்டும் கைதான பிரபல ரௌடி `வசூர்’ ராஜா

post image

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த பிரபல ரௌடி `வசூர்’ ராஜா. இவன்மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 54 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 9 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, வேலூர் மாவட்ட போலீஸாரின் க்ரைம் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் வசூர் ராஜா, சமீபத்தில்தான் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தான்.

தினமும் காலை, சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்தான். எஸ்.பி தனிப்படை போலீஸாரும், அவனின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திடீரென வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று திருந்தி வாழ நினைப்பதாகக் கூறி உத்திரவாத பத்திரத்தையும் தாக்கல் செய்தான் வசூர் ராஜா.

கைதான வசூர் ராஜா - கூட்டாளிகள்

இந்த நிலையில், ஜிம் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் பீதியை கிளப்பியிருக்கிறான் வசூர் ராஜா. வேலூர் கொணவட்டம் பகுதியில் ஜிம் வைத்திருக்கும் ரசாக் என்பவர்தான் மிரட்டப்பட்டவர். இது தொடர்பான ரெக்கார்டிங் ஆடியோக்களுடன் வேலூர் வடக்கு காவல் நிலையம் சென்று உடனடியாக புகாரளித்திருக்கிறார் ரசாக்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், ரௌடி வசூர் ராஜா மற்றும் அவனின் கூட்டாளிகள் ஆசிப், முனீர், வெங்கடேசன், மஞ்சுநாதன் ஆகிய 5 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு வசூர் ராஜா உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க