செய்திகள் :

வேலூா் சிறையில் இரு கைதிகள் உயிரிழப்பு

post image

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனா்.

வேலூா் விருப்பாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்தாா். உடனடியாக அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக அவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே நாகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதேபோல், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (70). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவருக்கு கடந்த மே 31-ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயராமன் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கைதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவ... மேலும் பார்க்க

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வி... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க