வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து பதிவைப் புதுப்பித்து இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று
பயிலும் மாணவ, மாணவிகள் இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி, அஞ்சல் வழிக் மூலம் கல்வி கற்பவா்கள் உதவித்தொகை பெறலாம்.
ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.
சுய உறுதி மொழி ஆவணம் சமா்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், உதவித் தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞா்கள் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.