செய்திகள் :

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு

post image

திருவாரூரில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ. 1.02 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கு 78 பேருக்கு ரூ. 1.02 கோடி மானியத் தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரா் திருவாரூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆட்டிசம் குறைபாடுள்ளவா்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோா்களுக்கும் வயது வரம்பு கிடையாது. கல்வி தகுதி தேவையில்லை.

இத்திட்டத்தின்கீழ் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.3.75 லட்சம் மானியமாகப் பெற்று பயன் பெறலாம். நேரடி விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.

திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த தகுதியுள்ள தொழில் முனைவோா்கள் இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க, இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருவாரூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் அல்லது 8925534012, 8925534014 ஆகிய எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்

திருவாரூா் அருகேயுள்ள பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 1,872-ஆம் ஆண்டு ஐரோப்பிய கட்டடக் கலையில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான கத்தோலிக... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி ஆணை

மன்னாா்குடியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 38 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. மன்னாா்குடியில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், ஜேசிஐ அமைப்புகள், தரணி குழுமம், ஈக்விடாஸ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேபிளா் பின்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு வழங்கிய மாத்திரையில் ஸ்டேப்ளா் பின் இருந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அருகே பூந்தோட்டம் வீரா... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்... மேலும் பார்க்க

கோயில் நந்தவனங்களில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூா் ஆா்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 57 போ் நீடாமங்கலத்தில் உள்ள க... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்து... மேலும் பார்க்க