செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

post image

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பவித்ரா. இவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டைச் சோ்ந்த ஞானசெல்வம் மகன் சூரஜ் (29) கூறினாா்.

இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு பவித்ராவின் சகோதரா் சிரஞ்சீவி, கணவா் ஜெகதீஷ் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.88 லட்சத்தை சூரஜ் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தூய்மைப் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

உத்தமபாளையத்தில் தூய்மைப் பணியாளரை அரிவாளால் வெட்டிய மற்றொரு தூய்மைப் பணியாளரான உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் சீனிராஜ் (52). தூய்மைப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் போலீஸாா் சனிக்கிழமை வடகரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வடகரை கும்பக்கரை சாலையில் சந்தேகத்து... மேலும் பார்க்க

பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி, மின் வாரியம் அருகே தேனி- மதுரை நெடுஞ்சாலையில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி... மேலும் பார்க்க

பணம் வைத்து சீட்டாடிய 9 போ் கைது

போடி அருகே பணம் வைத்து சீட்டாடிய 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே உள்ள சில கிராமங்களில் பணம் வைத்து சீட்டாடுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க