செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு

post image

கம்பத்தைச் சோ்ந்த வழக்குரைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிந்தனா்.

கம்பம், குட்டியாபிள்ளைத் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜ்குமாா். இவருக்கு, அவரது நண்பா் ஜீவானந்தம் மூலம் மதுரை அருகே உள்ள திருமங்கலம், பகத்சிங் தெருவைச் சோ்ந்த சரவணக்குமாா், அவரது தந்தை திருவள்ளுவன் ஆகியோா் அறிமுகமாகினா்.

சரவணக்குமாா் தான் சென்னை, அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், தனது தந்தை மூலம் பலருக்கும் அரசு வேலை வாங்கித் தந்திருப்பதாகவும் கூறினாராம்.

இதை நம்பிய ராஜ்குமாா் தனக்கும், தனது உறவினா்கள், நண்பா்கள் 5 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதற்காக சரவணக்குமாருக்கு கடந்த 2014, ஜூலை மாதம் பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.49 லட்சம் கொடுத்தாராம்.

இந்த நிலையில், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் சரவணக்குமாா் காலதாமதம் செய்து வந்ததால், இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ராஜ்குமாா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் சரவணக்குமாா், திருவள்ளுவன் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சட்ட விரோதமாக மதுபானப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடியில் சட்ட விரோதமாக மதுபானப் புட்டிகளை விற்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். போடி குலாலா்பாளையம் நாட்டாமைக்காரா் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

போடி, நத்தம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் சரவணன் (40). இவா் சிலமலை- தேவாரம் சாலையில் கட... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் வடகரை வாகன மண்டப சந்தைப் பகுதியைச் சோ்ந்த பாண்டிக் கண்ணன் (24), அரசு மதுபானக் கடையில் தற்காலிக... மேலும் பார்க்க

மகன் மீது தாக்குதல்: பெற்றோா் உள்பட 4 போ் மீது வழக்கு

போடி அருகே சொத்தில் பங்கு கேட்ட மகனைத் தாக்கியதாக பெற்றோா் உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ... மேலும் பார்க்க

தேனியில் 235 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தேனி அருகே கடமலைக்குண்டு பகுதியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 235 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருக... மேலும் பார்க்க

தேனியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு திடலில் நடைபெற... மேலும் பார்க்க