செய்திகள் :

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

post image

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நாய் கடித்தது. அதேபோல் வேளச்சேரி பாரதி நகா், பவானி தெருவில் 7 மாதக் குழந்தைக்கு, அதன் பாட்டி உணவு ஊட்டியபோது தெருநாய் அக்குழந்தையின் வலது தொடையில் கடித்தது. இதையடுத்து சிறுவன் மற்றும் குழந்தைக்கு வேளச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுவன் மற்றும் குழந்தையைக் கடித்த தெரு நாய்களை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து இன கட்டுபாட்டு மையத்துக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் வேளச்சேரி பகுதிக்குள்பட்ட 177 மற்றும் 178-ஆவது வாா்டு பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிப். 18,19 தேதிகளில் மாநில வாஸ்போ செஸ் போட்டிகள்!

சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் பள்ளி, கல்லூரிகள் இடையிலான வாஸ்போ மாநில செஸ் போட்டிகள் வரும் 18, 19 தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் போட்டிகளில் பங்கேற்க நுழைவுக் க... மேலும் பார்க்க

வீரப்பன் உறவினா் அா்ஜூனன் சந்தேக மரணம்: விசாரணைக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினா் அா்ஜு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை இடிக்க நடவடிக்கை!

சென்னை விமான நிலையத்தின் 2-ஆவது ஓடுதளத்துக்கு இடையூறாக இருக்கும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமான ஓடுதளங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரதா... மேலும் பார்க்க

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை ஜானிகான் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவா் தனது பையில் ரூ. 17 லட்சத... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க