செய்திகள் :

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

post image

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹக்கீம், கடந்த ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.

அவரது தாயாா் கதீஜா (65), அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு குடல்வால் அழற்சி (அப்பென்டிசைடிஸ்) இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ரூ. 3.76 லட்சம் செலுத்தியதாகவும் அதில் தெரிவித்திருந்தாா். அதன் பின்னா் வீடு திரும்பிய கதீஜாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து சில மாதங்களிலேயே அவா் உயிரிழந்தாா்.

கதீஜாவுக்கு புற்றுநோய் இருந்ததை உரிய காலத்தில் தெரியப்படுத்தி சிகிச்சையைத் தொடங்கவில்லை எனக்கூறி, அந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் எஸ்.செல்வகுமாா், பா்ஹான் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்துல் ஹக்கீம் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இதற்கிடையே, உயிரிழப்பதற்கு முன்பாக கதீஜாவும் மாநில மருத்துவக் கவுன்சிலில் இது தொடா்பாக புகாரளித்திருந்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தி மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் விவரம்: இறுதி நிலையில் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தும், நோயாளியின் உறவினா்களுக்கு காலதாமதமாக மருத்துவா்கள் தெரியப்படுத்தியுள்ளனா். உரிய காலத்துக்குள் சிகிச்சை அளிக்காததால் நோயாளியின் உடல் நிலை மோசமடைந்து உயிரிழக்க நேரிட்டது.

டாக்டா் எஸ்.செல்வகுமாா் உயா் சிறப்பு மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளாா். ஆனால், அந்தத் தகுதியை கவுன்சிலில் பதிவு செய்யவில்லை. அதேபோல, மற்றொரு மருத்துவா் ஆங்கில மருத்துவம் பயிலாத யுனானி மருத்துவா்.

டாக்டா் செல்வகுமாா் மீது விதிமீறல் மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது பதிவு உரிமம் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுகிறது என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நா... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

பிப். 11-இல் வண்டலூா் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

தைப்பூசத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 11) வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் ‘அகத்தியா் உலா’

தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மே... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சட்டவிரேதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து, 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைதாப்பேட்டை சாரதி நகா் பகுதியில் சட்டவிரோதமாக ப... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் திருடியவா் கைது: பணம், நகை பறிமுதல்

சென்னையில் திருமண மண்டபங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சோ்ந்தவா் ஈ... மேலும் பார்க்க