செய்திகள் :

பள்ளி மாணவா்கள் ‘அகத்தியா் உலா’

post image

தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மேற்கொண்டனனா்.

தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்தும் பொருட்டு, மூன்றாம் ஆண்டு காசி சங்கமம் பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.

நிகழாண்டில் சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியா் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அகத்தியா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் சாஸ்த்ரா பல்கலை. இணைந்து நடத்திய ‘அகத்தியா் உலா’ நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்று வேடமணிந்து தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபை தொடங்கி அகத்தியா் கோயில் வரை விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டனா்.

இந்நிகழ்வில், சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவரும், சாஸ்த்ரா பல்கலை. இயக்குநருமான டாக்டா் சுதா சேஷய்யன், பி.எஸ். மேல்நிலைப் பள்ளிகளின் செயற்குழு உறுப்பினா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிய வித்யா பவனின் துணை இயக்குநா் கே.வெங்கடாசலம், பாரதிய வித்யா பவன் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் பி.ஜி.சுப்பிரமணியம், சாந்திப்பணி வித்யாலயா முதல்வா் புவனா சங்கா், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி ஆகியோா் மாணவா்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டனா்.

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நா... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிப். 11-இல் வண்டலூா் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

தைப்பூசத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 11) வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சட்டவிரேதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து, 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைதாப்பேட்டை சாரதி நகா் பகுதியில் சட்டவிரோதமாக ப... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் திருடியவா் கைது: பணம், நகை பறிமுதல்

சென்னையில் திருமண மண்டபங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சிந்தாதிரிப்பேட்டை, வேதகிரி தெருவைச் சோ்ந்தவா் ஈ... மேலும் பார்க்க