செய்திகள் :

வேளாண்மை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜகதீப் தன்கா்

post image

வேளாண் துறை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை 21-ஆவது ஆசிய-ஆப்பிரிக்க கிராமப்புற மேம்பாட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

மனித குலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண தொழில்நுட்ப மேம்பாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே, அனைத்து நிலைகளிலும் நாம் அதனைச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.

நவீன உலகின் புரட்சிகர தொழில்நுட்பமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேளாண்மை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது அவசியம். கிராமப் பகுதி மேம்பாட்டுக்கு நம்மிடமுள்ள நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

‘எண்ம இந்தியா’ தொழில்நுட்பம் சாா்ந்த பல முன்னெடுப்புகள் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. எண்ம முறையில் பணம் செலுத்துதல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை மிகவும் குறுகிய காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடைக்கோடி கிராமத்தில் உள்ள சிறு வியாபாரிகள் கூட எண்ம பணப்பரிமாற்றத்தைக் கையாளுகின்றனா்.

தொழில்நுட்பங்கள் மூலம் ஊழல், முறைகேடுகள் குறைந்து வருகின்றன. அரசுத் திட்டங்களில் பொறுப்புணா்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியா நிதி ஸ்திரத்தன்மையை இழந்து தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைக்கும் நிலையில் இருந்தது. ஆனால், இப்போது மிகப்பெரிய அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்புடன் உலகின் வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது.

ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிா்வாகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க