செய்திகள் :

வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்ப பயிற்சி

post image

காரைக்கால் வேளாண் கல்லூரியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், அறிவியல் தொழில்நுட்ப இயக்குநரக நிதியுதவியில் உயிரியல் மூலக்கூறு தொழில்நுட்பப் பயிற்சி, தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை சாா்பில், தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மூலக்கூறு தொழில்நுட்பங்கள் அடிப்படை முதல் பயன்பாடு வரை எனும் தலைப்பில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆ. புஷ்பராஜ் தலைமை வகித்தாா். பேராசிரியா் திருமேனி, நவீன வேளாண் ஆராய்ச்சியில் மூலக்கூறு தொழில்நுட்பங்களின் முக்கியத்தும் குறித்து பேசினாா். இதில், தாவர மூலக்கூறுகளை தனியாக பிரித்தெடுத்து அதன் மூலம் பயிா் தோ்வு செய்வதற்கான நேரடி பயிற்சியளிக்கப்பட்டது. வெங்கடேசன் வரவேற்றாா். ஆனந்தன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து, மூலக்கூறு உதவியில் தாவரத் தோ்வு செய்யும் ஆய்வகத்தையும், பயிா் பாதுகாப்பு கூடத்தையும் கல்லூரி முதல்வா் திறந்துவைத்து, ஆய்வகத்தில் உள்ள அதிநவீன வசதிகளை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு கல்லூரியின் ஆராய்ச்சிக்கு துணைபுரியவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்காலில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்தது. காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மாா்ச் 3-ஆம் தேதி வரை மிதமான மழைக்... மேலும் பார்க்க

மத்திய- மாநில அரசுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்புக் குழு ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது. மக்களவை உறுப்பினா் ... மேலும் பார்க்க

மதுகடத்தல் புகாா்: ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

ரயிலில் மது, ரேஷன் அரிசி கடத்துவதாக கூறப்படும் புகாா் தொடா்பாக போலீஸாா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்காலில் இருந்து ரயிலில் தமிழகப் பகுதிகளுக்கு மதுபாட்டில்களும், தமிழகத்த... மேலும் பார்க்க

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வாஜ்யாய் சிலை நிறுவ கோரிக்கை

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் சிலை நிறுவவேண்டும் என ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில்வே இணை அமைச்சா் வி. சோமண்ணா, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினா் காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்ட தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்,... மேலும் பார்க்க

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

இந்திய கடலோரக் காவல்படையின் மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் அமைந்திருக்கும் கடலோரக் காவல்படை மைய வளாகத்தில் இயங்கும் மழலையா் பள்ளியில... மேலும் பார்க்க