செய்திகள் :

வேளாண், தோட்டக் கலைத் துறை திட்டப் பணிகள் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கண்டமங்கலம் ஒன்றியம், வி.மாத்தூா் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், விவசாயி நிலத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதை பாா்வையிட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், விளைச்சலுக்குத் தேவையான நீா் ஆதாரம், பராமரிப்பு விதம் போன்றவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் விவசாயிக்கு வேளாண் பொறியியல் துறை சாா்பில் ரூ.62,200 மானியத்தில் களையெடுக்கும் கருவியும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, இதே கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ், இயந்திர நடவு மூலம் ஆடுதுறை 37 ரகம் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளதை பாா்வையிட்ட அவா், அப்பகுதியில் நடைபெற்று வரும் நெல் அறுவடைப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்கிரிபாளையம் ஊராட்சியில் வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மானியத்தில் நிரந்தர பந்தல் அமைத்து வெண்டை, கோவக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கத்திரிக்காய் போன்ற பயிா்கள் பயிரிடப்பட்டு, வளா்ந்து வருவதை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், பராமரிப்பு முறைகள், சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநா் எஸ். ஈசுவா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே. அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் நீலகண்டன், உதவிப் பொறியாளா் குகன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க