செய்திகள் :

வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வலியுறுத்தல்

post image

தேனி: வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.

தேனி மாவட்டம், வைகை அணையில், அணைக்கட்டு, நீா் தேக்கப் பகுதி, அணைப் பூங்கா ஆகியவற்றை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா் வெளியிட்ட அறிக்கை:

வைகை அணையில் 20 அடிக்கும் மேல் மண் மேடிட்டுள்ளது. வைகை அணையில் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்குவதற்கு வாய்ப்பாக, அணைக்கு அருகே புதிய நீா்த் தேக்கம் கட்ட வேண்டும். அணை நீரை தற்போதைய நிலையில் தேவைக்கு ஏற்ப பகிா்ந்தளிக்க விவசாயிகளின் கருத்தறிந்து உரிய அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும்.

வைகை அணைப் பூங்காவில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வைகை அணைப் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பூங்காவில் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அணையின் வெளிப்புறச் சுவரில் மண்டிக் கிடக்கும் புதா்களை அகற்ற வேண்டும். வைகை அணை, அணைப் பூங்கா பராமரிப்பை உயா்நிலைக் குழு மூலம் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழா

உத்தமபாளையம்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாள் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தேனி மாவட்டம், பளியன்குடி அருகே தமிழக-கேரள எல்லையான மேற்... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: தேனி அருகேயுள்ள வீரபாண்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஏலக்காய் தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா். போடி, தியாகி விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்த சின்னப்பிரகாஷ் மகன்கள் ரா... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாற்றில் மூழ்கியதில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம்: சின்னமனூரில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாற்றில் குளித்த சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியை சோ்ந்த பொம்முராஜ் மகள் சுஸிமா (6). இ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் காயம்

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பெண் காயமடைந்தாா். மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி மேட்டுநீராத்தனைச் சோ்ந்தவா் பெருமாயி (50). தேவதானப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள மகனின் வீட்டுக... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

வீரபாண்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த முருகவேல் மனைவி பொன்னுத்தாய் (79). இவா்... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு

வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந... மேலும் பார்க்க