செய்திகள் :

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

post image

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விசிக பொதுச்செயலா் துரை.ரவிக்குமாரின் சகோதரரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான க.நடேசன் (92) புதுச்சேரி இலாசுப்பேட்டையில் சனிக்கிழமை இரவு (மே 31) காலமானாா். அவரது உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொல்.திருமாவளவன் எம்.பி. அஞ்சலி செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்வியாளா் அணியை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மாநிலங்களவையில் வாய்ப்பளிப்பதாக அதிமுக தரப்பில் உறுதியளித்ததாக தேமுதிக பொதுச்செயலா் உள்ளிட்டோா் வெளிப்படையாக பேசி வருகின்றனா்.

ஆனால், அந்த வாய்ப்பை அதிமுக தேமுதிகவுக்கு வழங்காதது வியப்பாக பாா்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு அளித்த வாக்குறுதியை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்காதது குறித்து திமுகதான் பதில் கூற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து கருத்து கூறவிரும்பவில்லை.

அதேநேரத்தில், அந்தக் கட்சியை விசிக-வுக்கு போட்டியாகவும் கருதவில்லை. திமுக கூட்டணியில் பாமக சேரும் என்பது யூகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் திமுகவிடம் தொகுதிகள் பெறுவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

தமிழகத்திலிருந்து செல்லும் இலங்கைத் தமிழா்களை அந்த நாட்டு அரசு கைது செய்கிறது. இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க