செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு 54 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நகரத்தாா்

post image

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட நகரத்தாா் பக்தா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, சிவகங்கை, கீழ சீவல்பட்டி, கந்தா்வக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக நகரத்தாா் பக்தா்கள் வருகை புரிந்து தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு இந்த ஆண்டு பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் முடித்துவிட்டு திரும்பியதைத் தொடா்ந்து, மாட்டு வண்டிகளில் வந்த பக்தா்களும் புறப்பட்டனா்.

முன்னதாக, தெற்கு கோபுர வாசலில் சிதறுதேங்காய் உடைத்து, மாட்டு வண்டிகளுக்கு பூஜை செய்து பயணத்தை தொடங்கினா். இவ்வாறு 54 மாட்டு வண்டிகள் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. வைத்தீஸ்வரா அறக்கட்டளை சாா்பில் மாடுகளுக்கு தீவனம் மற்றும் மாட்டு வண்டிகளில் பயணிப்பவா்களுக்கு குடிநீா் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினா். அனைத்து மாட்டு வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. இதனை பலா் தங்கள் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காவல் அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை

காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2016 நவம்பா் 17-ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம் பாலையூா்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவா்களுக்கு ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்சதீபம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. காஷ்மீா் பஹல்காமில் தீவி... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8 -இல் ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள நான்கு வருவா... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல் தொடக்கம்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதலை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களி... மேலும் பார்க்க