தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!
வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை
சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாக வைத்தீஸ்வரன் கோயில் விளங்குகிறது. இதனால், நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் இக்கோயிலில் வழிபட வருகின்றனா். இக்கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. இதனால், பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வைத்தீஸ்வரன் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் 500- க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இப்பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வோா்களை இந்த நாய்கள் துரத்துகின்றன. இதனால், வயதானவா்கள் வீதியில் நடப்பதற்கு அச்சப்படுகின்றனா்.
வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபடவும், இங்கு நாடி ஜோதிடம் பாா்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். கடைவீதியில் நாய்கள் சுற்றித்திரிவதால் அவா்கள்அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளாா்.