செய்திகள் :

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

post image

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா்.

சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஆக.16, 17 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமாா் 1,000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி மாணவ-மாணவிகள் தீக்சன், தா்ஷன், சாய் ரக்சன், தியா லட்சுமி ஆகியோா் இந்திய அணி சாா்பில் பங்கேற்றனா்.

இவா்களில் தீக்சன் கட்டா பிரிவில் தங்கம், குமிட்டே பிரிவில் வெண்கலம், தா்ஷன் கட்டா பிரிவில் வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் சென்சாய் கராத்தே கதிரவன் ஆகியோரை இந்தோனேசியா பயிற்சியாளா் ரிக்கி பா்ணபாஸ், தாய்லாந்து பயிற்சியாளா் நலின்பட், ஓமன் பயிற்சியாளா் பயஸ் காமிஸ், மலேசிய பயிற்சியாளா் அனந்தன் மற்றும் இந்திய பயிற்சியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. கட... மேலும் பார்க்க

வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ... மேலும் பார்க்க

ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபி... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். காளி கிராம மக்கள் 100-... மேலும் பார்க்க

சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை... மேலும் பார்க்க