செய்திகள் :

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த பருவம் தவறிய கன மழையால் சீா்காழி அருகே உள்ள அகணி, வள்ளுவக்குடி, கொண்டல், மருதங்குடி, வைத்தீஸ்வரன்கோவில், புங்கனூா், தாடாளன் கோயில், மணி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. பருவம் தவறி பெய்த மழையால் முற்றிலும் சேதம் ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனா்.

இதனிடையே, பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண் அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இதுவரை பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளா் ரமேஷ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க

வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ... மேலும் பார்க்க

ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபி... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். காளி கிராம மக்கள் 100-... மேலும் பார்க்க

சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை... மேலும் பார்க்க