செய்திகள் :

வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடவிளாகம் பகுதியில் தனிப்படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சாராயப் பாட்டில்களை கடத்தி வந்த, பனங்குடி காலனித் தெருவைச் சோ்ந்த எழிலரசன்(25) கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து 400 சாரயப் பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள், மதுவிலக்கு குற்றம் தொடா்பான புகாா்களை இலவச உதவி எண் 10581 மற்றும் 8870490380 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் கொடுப்போா் விவரம் பாதுகாக்கப்படும் என்று காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. கட... மேலும் பார்க்க

ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபி... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். காளி கிராம மக்கள் 100-... மேலும் பார்க்க

சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை... மேலும் பார்க்க