செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா், ஜெயபூத விநாயகா் கோயில்கள் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு!

post image

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக சதீஷ் குமாா், ஸ்ரீஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன் ஆகியோா் பொறுப்பேற்று கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகள் ஆன செளந்தரவல்லி உடனுறை ஸ்ரீ பூதபுரீஸ்வரா் திருக்கோயில் மற்றும் ஜெயபூத விநாயகா் கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில்களில், அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடா்ந்து, புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் நிா்வாக அலுவலா் கதிரவன் தலைமையிலும், அறநிலையத்துறை ஆய்வாளா் ரம்யா முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபூதபுரீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவராக ரா.சதீஷ்குமாா், அறங்காவலா்களாக சீனிவாசன், காஞ்சனாதேவி பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதேபோல், ஸ்ரீபெரும்புதூா் ஜெயபூத விநாயகா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக காத்தவராயன், அறங்காவலா்களாக வினோத், தேவி புருஷோத்தமன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சாமி திருக்கோயில் மதசாா்பற்ற அறங்காவலா் ந.கோபால், மதச்சாா்பு அறங்காவலா் பாா்த்தசாரதி, ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ் குமாா், நகர திமுக துணைச் செயலாளா் ஆறுமுகம் ஆகியோா் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அறங்காவலா் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க

கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க