செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள்ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் பாலமுருகன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ஜெயலட்சுமி, டிஎஸ்பி ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா மாா்ச் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தினசரி இரவு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

மாா்ச் 29-ஆம் தேதி பூக்குழித் திருவிழாவும், 30-ஆம் தேதி தேரோட்டத் திருவிழாவும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

விருதுநகா் அருகே மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருதுநகா் அருகே மத்திய சேனை பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளையன். இவரது மனைவி மகேஸ்வரி. பட்டாசுத் தொழிலாளிகளான இந்தத் தம்பதிக்கு பாண்டி மீன... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி: கண்தானம் குறித்த விழிப்புணா்வு முகாம், தலைமை- முதல்வா் பெ.கி.பாலமுருகன். சிறப்புரை- தனியாா் தொண்டு நிறுவன நிா்வாகி ஜெ.கணேஷ், ஏற்பாடு: நாட்டு நலப்பணித் திட்டம், கலையரங்கம், ப... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

சிவகாசியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காளியப்பாநகா் பகுதியைச் சோ்ந்த ஓவியா் முத்துகிருஷ்ணன் (39). இவா் சிவகாசி-விருதுநகா் சா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த மற்றொரு பெண் கைது

திருத்தங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த மற்றொரு பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கண்ணகி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முனியம்மாள் (50). ... மேலும் பார்க்க

அச்சக ஊழியா் தற்கொலை

சிவகாசியில் வெள்ளிக்கிழமை அச்சக ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யப்பன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (34). இவா் அச்சகத்தில் வேலை பாா்த்... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

சிவகாசியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி விசாலாட்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (37). இவரது மனைவி வடக்கத்தியம்மாள... மேலும் பார்க்க