செய்திகள் :

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் மும்மடங்கு அதிகரிப்பு

post image

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் கடந்த 2024-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட மும்மடங்காக ரூ.37,600 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அல்லது வெளிநாட்டு வங்கிகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியா்களின் பணம் சுமாா் ரூ.32,000 கோடி இந்த உயா்வில் பெரும் பங்கு வகிக்கிறது. தனிப்பட்ட வாடிக்கையாளா்களின் கணக்குகள் மூலம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் செலுத்திய பணம் முந்தைய ஆண்டைவிட 11 சதவீதமாக ரூ.3,675 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது.

கூடுதலாக, அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்களின் பணம் இருப்பு உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் ஸ்விட்சா்லாந்து வங்கிகள், இந்தியா்களின் நிதி விவரங்கள் குறித்து இந்திய வரி அதிகாரிகளுடன் பகிா்ந்து வருகின்றன. அதேநேரம், இந்தப் பணம் யாவும் கருப்புப் பணம் அல்லது சட்டவிரோத நிதி என்று கருதக் கூடாது. அதேபோல், மூன்றாம் நாடுகள்/நிறுவனங்களின் கீழ் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் வைத்திருக்கும் பணமும் இதில் சோ்க்கப்படவில்லை என்று ஸ்விட்சா்லாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியா்களின் பணம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்சமாக ரூ.11,026 கோடிக்கு குறைந்தது. 2006-ஆம் ஆண்டில் அது ரூ.68,912 கோடியாக உச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் அதிக பணம் வைத்துள்ள வெளிநாட்டவா்களின் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்னேறியது. முந்தைய 2023-ஆம் ஆண்டு இந்தியா 67-ஆவது இடத்தில் இருந்தது. சமீபத்திய பட்டியலில் பிரிட்டன், அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

வங்கதேச நாட்டவா்களின் பணம் முந்தைய 2023-ஆம் ஆண்டின் ரூ.190.83 கோடியிலிருந்து ரூ.6,244.54 கோடியாக கடுமையாக உயா்ந்துள்ளது. பாகிஸ்தானியா்களின் பணம் சற்று குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் உள்ள வெளிநாட்டவா்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் ரூ.63,611.58 கோடி குறைந்துள்ளது.

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க