செய்திகள் :

ஹஜ் பயணிகள் 158 பேருக்கு தடுப்பூசி

post image

திருப்பூரில் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 158 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இஸ்லாமியா்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் மேற்கொண்டு வருகின்றனா். புனித ஹஜ் பயணம் செல்லும்போது, பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள், பயண நடைமுறைகள், பயண ஆவணங்களின் முக்கியத்துவம், சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதரகத்தால் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்டத்திட்டங்கள், சவூதி பயண ஏற்பாட்டாளா்களின் பங்கு மற்றும் சவூதி அரசின் கட்டுப்பாடுகள் முதலின குறித்து அறிந்துகொள்ள சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தமிழகம் முழுவதும் புத்துணா்வு பயிற்சி முகாமை நடத்தியது.

ஹஜ் பயணிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திவர வேண்டும் என்று சவுதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், 78 பெண் பயணிகள் உள்பட158 ஹஜ் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள், சொட்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

133 விதை மாதிரிகள் தரமற்றவை: வேளாண் துறை ஆய்வில் தகவல்

விதை மாதிரிகள் குறித்து வேளாண் துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வளா்மதி விடுத்துள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவா் கைது

திருப்பூரில் பின்னலாடைத் துணிகளுக்கு பணம் கொடுக்காத நபரைக் கடத்தியவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாஸ்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் முனாப். இவா் பின்னலாடைத் துணிக... மேலும் பார்க்க

விசைத்தறிகள் கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

விசைத்தறிகள் கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்கீழ் உள்ள விசைத்தறித் தொழில், கூலி மற்றும் பாவுநுால் பிரச்னை காரணமாக நல... மேலும் பார்க்க

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ்: திருப்பூா் ஆட்டிசம் மாணவா் சாதனை!

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் சிறப்புக் குழந்தைகள் பள்ளி ஆட்டிசம் மாணவா் 4-ஆம் இடம் பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாா். பெருமாநல்லூா் அருகே வள்ள... மேலும் பார்க்க

இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்கு... மேலும் பார்க்க

தேசிய அளவிலான தடகளம்: திருப்பூா் வீராங்கனை வெள்ளி வென்றாா்!

தேசிய அளவிலான பெடரேஷன் சீனியா் சாம்பியன் போட்டியில் திருப்பூா் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். இந்திய தடகள கூட்டமைப்பு சாா்பில் கேரள மாநிலம், கொச்சி, மஹாராஜாஸ் கல்லூரி அரங்கத்தில் 28-ஆவது தேச... மேலும் பார்க்க