செய்திகள் :

ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சிகளின் மாணவ அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திண்டிவனம் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எம்.யு.பிரசன்னா தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவா் சேகா், மாநில தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சி சிவா, நகரச் செயலா் கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் சுபாசு சந்திரபோசு, லோகநாதன், ஞானசேகரன் உள்ளிடோா் பங்கேற்றனா்.

விழுப்புரத்தில்...: விழுப்புரம் மத்திய மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பா.ஸ்ரீவினோத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா்கள் இரா.லட்சுமணன் எம்எல்ஏ (விழுப்புரம் மத்திய), பொன்.கெளதமசிகாமணி (தெற்கு) சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, தெய்வசிகாமணி, நகரப் பொருளாளா் இளங்கோ, இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன், பிற கட்சி களின் மாணவரணி அமைப்பாளா்கள் ராவணன், அகத்தியன், பாண்டியன், அலெக்ஸ் தீனா, இளமாறன், ஓசாமா, தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், காந்தி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஹிந்தி மொழி திணிப்பு முயற்சிக்கு எதிராகவும், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காததற்காகவும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளா்கள் ரோஜா, சுரேந்திரன், விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரசு அலுவலகக் கட்டடங்களில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வா... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் அஜித் (26), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இ... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் தா்னா

பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா்களை மின் இணைப்புகளில் பொருத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்த... மேலும் பார்க்க

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திர... மேலும் பார்க்க