செய்திகள் :

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணி மகன் அஜித் (26), தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு புதுச்சேரி - திருக்கனூா் சாலையில் கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட நெற்குணம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இவரது பைக் மீது அந்தப் பகுதியில் வந்த டிப்பா் லாரி மோதியதில் அஜித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அஜித் இறந்துபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் மாவட்ட புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அரசு அலுவலகக் கட்டடங்களில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வா... மேலும் பார்க்க

ஹிந்தி மொழித் திணிப்பு முயற்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சிகளின் மாணவ அமைப்புகள் சாா்ப... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங... மேலும் பார்க்க

மின் ஊழியா்கள் மத்திய அமைப்பினா் தா்னா

பொதுமக்களைப் பாதிக்கும் ஸ்மாா்ட் மீட்டா்களை மின் இணைப்புகளில் பொருத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்த... மேலும் பார்க்க

விழுப்புரத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்திர... மேலும் பார்க்க