செய்திகள் :

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை- உ.பி. நீதிமன்றம் தீா்ப்பு

post image

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி அல்தாஃப் ஹுசைனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், அவருக்கு ரூ.48,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அல்தாப் ஹுசைன் எனும் முகமது சைஃபுல் இஸ்லாம் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கடந்த 2002 முதல் பல்வேறு பயங்கரவாத சதிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.

2008-ஆம் ஆண்டு மொராதாபாத் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவா், மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு சென்று பயங்கரவாத அமைப்புடன் இணைந்தாா்.

இதைத் தொடா்ந்து, 2015-ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் அல்தாஃப்புக்கு எதிராக மொராதாபாத் நீதிமன்றம் நிரந்தர கைது உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த இவரை, உள்ளூா் காவல் துறை உதவியுடன் உத்தர பிரதேச காவல் துறையினா் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி சுற்றிவளைத்து கைது செய்தனா். பின்னா், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

இந்நிலையில், அவா் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டு, அல்தாஃப்புக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.48,000 அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க