செய்திகள் :

ஹைதராபாத்: கலப்பட கள் உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கலப்பட கள் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக அதிகரித்தது. மேலும் 44 பேருக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக சந்தேகத்துக்குரிய மரணம் என்ற பிரிவில் செகந்திராபாத் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பந்தப்பட்ட கள் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. சந்தேகத்தின் அடிப்படையில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரின் குக்கட்பள்ளி, பாலநகா் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவா்களில் 44 போ் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் பெண்களும் அடங்குவா்.

இதில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இருவா் உயிரிழந்தனா். இதில் மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால் கலப்பட கள் உயிரிழப்பு 4-ஆக அதிகரித்துள்ளது.

கள்ளில் கூடுதல் போதைக்காக வேறு ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்த கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க