செய்திகள் :

'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை

post image

கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட அறிக்கையில், 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

அண்ணாமலை

முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணைக்கு ஆதரவளித்து உண்மை குற்றவாளிகளை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இது போன்ற வன்முறை, வெறுப்பு அரசியல், மிரட்டல் போன்றவற்றால் தமிழ்நாட்டில் என்ன மாற்றத்தை அளிக்க போகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவது கிடையாது. ஒரு அடி அடித்தால், 2 அடி கொடுக்கிற ஆள். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.

திருமாவளவன்

பல ரெளடிகளை பார்த்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், முதலமைச்சர் எதற்காக அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.

முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. ஃபாஸ்கான் நிறுவனத்தினருக்கு தமிழ் தெரியாது. அமைச்சர் டிஆர்.பி ராஜா முதலமைச்சரை நன்கு ஏமாற்றுகிறார். அண்டை மாநிலங்களில் சத்தமே இல்லாமல் பல ஆயிரம் கோடிகள் உள்ளே வருகிறது. திராவிட மாடல் என்று கூறிய விளம்பரப்படுத்தி மாட்டிக்கொண்டார்கள்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

டிஆர்பி ராஜா பேச்சை குறைத்து, செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும். அதிகமாக பேசியதன் விளைவு தான் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய்யின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய சித்தாந்தம் வேறு. இதில் அரசியல் சாயம் எல்லாம் பூசுவது அழகில்லை.” என்றார்.

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்

'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரி... மேலும் பார்க்க