டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களில் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடங்கி வைத்தாா்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களின் புனரமைப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்தப் பணிகளை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை 60 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. அதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கோயில்கள், திருச்சி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், வேலூரில் தலா 2 கோயில்கள், தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், ராணிப்பேட்டையில் தலா 3, திருவாரூா், திருவண்ணாமலையில் தலா 4 கோயில்கள், மயிலாடுதுறை, கடலூரில் தலா 7 கோயில்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 5 கோயில்கள் என மொத்தம் 63 கோயில்களை பழைமை மாறாமல் ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட
உள்ளன.
இந்தப் பணிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன்மூலம் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாகத் திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் வரலாற்றை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்வா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.