செய்திகள் :

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களில் புனரமைப்புப் பணி: முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 63 கோயில்களின் புனரமைப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்தப் பணிகளை அவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுவரை 60 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளன. அதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கோயில்கள், திருச்சி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், வேலூரில் தலா 2 கோயில்கள், தஞ்சாவூா், கள்ளக்குறிச்சி, திருவள்ளூா், ராணிப்பேட்டையில் தலா 3, திருவாரூா், திருவண்ணாமலையில் தலா 4 கோயில்கள், மயிலாடுதுறை, கடலூரில் தலா 7 கோயில்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 5 கோயில்கள் என மொத்தம் 63 கோயில்களை பழைமை மாறாமல் ரூ.100 கோடியில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட

உள்ளன.

இந்தப் பணிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதன்மூலம் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாகத் திகழும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் வரலாற்றை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்வா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க