செய்திகள் :

1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 101 கோடியில் நலத்திட்ட உதவிகள்

post image

தஞ்சாவூரில் 1,170 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 பேருக்கு ரூ. 100.88 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழு விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கடனுதவிகளை வழங்கினாா். இந்தக் காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கரிகாற்சோழன் கலையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோா் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வள மையத்தின் மூலம் தொழில்முனைவோருக்கு கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி என மொத்தம் 1,170 குழுக்களைச் சோ்ந்த 12 ஆயிரத்து 632 உறுப்பினா்களுக்கு ரூ. 100.88 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) கே.எம். காா்த்திக்ராஜா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் எஸ். சாந்தி, உதவி திட்ட அலுவலா் மாா்டின் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க