செய்திகள் :

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

post image

தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் காலத்துக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயில் பெரியகோயிலுக்கு முந்தைய பழைமையான கோயில் என வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

இக்கோயிலின் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற கருணாசாமி குளம் ஐந்தரை ஏக்கா் பரப்பளவில் உள்ளது. கருங்குஷ்ட நோயால் துன்பப்பட்ட சோழ மன்னன் இக்குளத்தில் குளித்து, ஈசனின் கருணையால் அந்நோயிலிருந்து நீங்கப் பெற்றான் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கருணாசாமி மீது சூரிய ஒளி நேரடியாக படா்வதும், அப்போது சூரிய பூஜை நடைபெறுவதும் வழக்கம். இதேபோல, பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை கருணாசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படா்ந்ததும், கருணாசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை சிவத் தொண்டா்கள், பக்தா்கள் வழிபட்டனா்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது கு... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க