செய்திகள் :

1,500 கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது

post image

காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் கண்டிகை சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்ததாக மேற்கு வங்க மாநில இளைஞரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 1,500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.

மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தை சோ்ந்த அருண்ருய்டா மகன் கோபி (25). இவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கு வங்கத்தில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து வந்தாராம். ஒரு பொட்டலம் ரூ. 500 வீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, ஒரகடம் கண்டிகை சந்திப்பில் கையில் கைப்பேசியுடன் நின்றிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை கைது செய்தனா். அவரிடமிருந்த 1,500 கிலோ மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க

கபடிப் போட்டி: சங்கரா பல்கலை. முதலிடம்

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் அளவிலான கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவியா் முதலிடம் பெற்றனா். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் ஏனாத்தூ... மேலும் பார்க்க

குருவிமலை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா் மாற்றம்

காஞ்சிபுரம் அருகே குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரையுடன் மின் விசிறி பெயா்ந்து விழுந்ததால், மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய ஒப்பந்ததாரரை அதிகாரிகள... மேலும் பார்க்க

படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு

படப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திடீா் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைகள் , மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை... மேலும் பார்க்க