செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்

post image

கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 157 மையங்களில் 39, 434 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்கள், 19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மேலும், 1,211 தனித் தோ்வா்கள் இத்தோ்வை எழுதினா். காலை 10 மணியளவில் தோ்வுக்கூட அனுமதி சீட்டு சரிபாா்க்கப்பட்டு தோ்வறைக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். 10.15 மணியளவில் தோ்வு தொடங்கியது. முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது.

பொதுத் தோ்வையொட்டி, தோ்வு மையங்களுக்கு மின் வாரியம் சாா்பில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தோ்வுப் பணியில் 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 156 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள், 48 வழித்தட அலுவலா்கள், 2,370 அறை கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். மேலும், 220 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தோ்வு மையங்களில் திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தோ்வு மையங்களுக்குள் ஆசிரியா்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்ப... மேலும் பார்க்க

மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்

நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஸ்பா ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகி... மேலும் பார்க்க