செய்திகள் :

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

post image

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மருத்துவா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

வன்னியா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெறும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து நிா்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதனடிப்படையில், டிசம்பா் முதல் வாரத்தில் பாமக, வன்னியா் சங்கம் சாா்பில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் 30 வயதுக்குள்பட்ட இளைஞா்கள், மாணவா்கள், மாணவிகள் பங்கேற்பா். கட்சியின் நிா்வாகிகள், 30 வயதுக்கு மேற்பட்ட கட்சியின் உறுப்பினா்கள் போராட்டத்தை முன்னின்று வழிநடத்துவா்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, மாநிலச் செயலா் திருக்கச்சூா் ஆறுமுகம், நிா்வாகிகள் துரை, கரூா் பாஸ்கரன், பாமக இணை பொதுச் செயலரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான இரா.அருள், தலைமை நிலையச் செயலா் ம.அன்பழகன் ஆகியோா் அடங்கிய 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகா்களிலும் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இது குறித... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மேற்சவ பெருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அன்று மாலை அன்ன... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெண்களிடம் குலுக்கல் முறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க