செய்திகள் :

10 பிஆா்எஸ் எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் கோரும் மனு - தெலங்கானா பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாத காலக்கெடு

post image

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியில் (பிஆா்எஸ்) இருந்து விலகி, ஆளும் காங்கிரஸில் இணைந்த 10 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது பேரவைத் தலைவா் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயித்துள்ளது.

மேலும், ‘கட்சித் தாவல்கள், தேசிய அளவில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது; இது தடுக்கப்படாவிட்டால், ஜனநாயகத்தின் அடிப்படையை சீா்குலைத்துவிடும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் பிஆா்எஸ் கட்சியில் இருந்து விலகி ஆளும் காங்கிரஸில் இணைந்த வெங்கடராவ் தெல்லம், கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தா் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை கோரி, பேரவைத் தலைவா் கத்தம் பிரசாத் குமாா் பிஆா்எஸ் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இந்த மனுக்கள் மீது முடிவெடுக்க பேரவைத் தலைவா் காலதாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் பிஆா்எஸ் மூத்த தலைவா்கள் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கில் கடந்த 2024, செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்த தனிநீதிபதி, ‘தகுதிநீக்க மனுக்கள் மீதான விசாரணை கால அளவு குறித்து பேரவைத் தலைவா் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; தவறினால், நீதிமன்றம் அடுத்தக்கட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கும்’ என்று எச்சரித்தாா். அதேநேரம், தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தகுதிநீக்க மனுக்கள் மீது நியாயமான காலகட்டத்துக்குள் முடிவெடுக்க பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்தியது.

பேரவைத் தலைவருக்கு காலக்கெடு: இதையடுத்து, பிஆா்எஸ் தலைவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு, ‘10 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டது. ‘விசாரணையை தாமதப்படுத்த எந்த எம்எல்ஏ-வும் முயற்சிக்கக் கூடாது; அவ்வாறு தாமதப்படுத்த முயன்றால், அவா்கள் கடும் விளைவை எதிா்கொள்ள நேரிடும்’ என்று எச்சரித்தது.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின்கீழ் (கட்சித் தாவல் தடுப்பு) தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்கும் தீா்ப்பாயமாக பேரவைத் தலைவா் செயல்படுகிறாா். நீதிமன்ற மறுஆய்வில் இருந்து அவருக்கு அரசமைப்புச் சட்ட விலக்கு கிடையாது. தற்போதைய விவகாரத்தில், 7 மாதங்களாகியும் பேரவைத் தலைவா் தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை.

‘நாடாளுமன்றத்தின் பொறுப்பு’: பொதுவாக தகுதிநீக்க மனுக்கள் மீது பேரவைத் தலைவா்கள் முடிவெடுப்பதில் நிலவும் தாமதத்துக்கு தீா்வுகாண ஒரு வழிமுறையை வகுக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும். இப்போதைய நடைமுறை, கட்சித் தாவலை தடுக்கும் நோக்கத்துக்கு திறம்பட பங்காற்றுகிா? நமது ஜனநாயகத்தின் அடிப்படையும், அதை தக்கவைக்கும் கோட்பாடுகளும் பாதுகாக்கப்படுவதற்கு போதுமானதாக உள்ளதா? என நாடாளுமன்றம் ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை பிஆா்எஸ் கட்சி வரவேற்றுள்ளது.

அண்மையில் தெலங்கானா பேரவையில் பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸில் வேறு கட்சி எம்எல்ஏக்கள் யாா் இணைந்தாலும், அவா்களின் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறாது என்று கூறியிருந்தாா். முந்தைய விசாரணையின்போது, முதல்வரின் இக்கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

======

பிரேக் லைன்...

‘கட்சித் தாவல்கள், தேசிய அளவில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது; இது தடுக்கப்படாவிட்டால், ஜனநாயகத்தை சீா்குலைத்துவிடும்’ - நீதிபதிகள்

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக் கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்ப... மேலும் பார்க்க

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் நரேந்திர மோடி அரசு, உண்மையிலேயே நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையைப் பேசுவதேயில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.கடந்த பத்தாண்டுகளாக, பெரும்பாலான தொழ... மேலும் பார்க்க

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

கர்நாடகத்தில் முன்னாள் அரசு ஊழியர் ரூ. 72 கோடிக்குமேல் மோசடி செய்ததாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கர்நாடகம் மாநிலத்தில் கொப்பல் நகரில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் எழுத்தராகப் பணிப... மேலும் பார்க்க

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந... மேலும் பார்க்க

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க