செய்திகள் :

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை

post image

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை. இதற்கு தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினரும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், நிதி வழங்கப்படாததால் நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

இதற்கிடையில், மேட்டூா் அணையிலிருந்து குறித்த நேரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், நாகை மாவட்டத்தில் குறுவை நெற்பயிா் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்திற்கான நூறு நாள் வேலைத் திட்ட நிதியை விடுவித்துள்ளது. இதையடுத்து, நூறு நாள் வேலை கிராம மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் களை பறிப்பு, நாற்று பறித்து நடவு செய்தல், உரம் தெளித்தல், வரப்பு பலப்படுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளா்கள் கிடைக்காமல், பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாலையூரைச் சோ்ந்த விவசாயிகள் ராமலிங்கம், ஜெயபால் கூறியது:

நூறு நாள் வேலைக்கு தொழிலாளா்கள் சென்று விடுவதால், கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிக்கு தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. தொழிலாளா்களைத் தேடி கிராமம் கிராமமாக விவசாயிகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் உரிய பணிகளை மேற்கொள்ளாவிட்டால், தற்போது நாகை மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கு அதிகமான ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை நெற்பயிா் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, விவசாயப் பணிகள் பாதிக்காதவாறு நூறு நாள் திட்ட வேலைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

நாகூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், நாகூரில் செயல்படும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், நாகை ... மேலும் பார்க்க

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி

நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாக... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க