சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
கீழ்வேளூா் ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு மாதா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சுபாதேவி தலைமை வகித்தாா். பட்டமங்கலம் ஊராட்சியில் கடந்த 5 மாதங்களாக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்படாமல் உள்ளதால், ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
மேலும் முன்பு 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த பயனாளிகளுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும்.100 நாள் வேலையை உடனே தொடங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி செயலாளா் முத்துவேலிடம் மாதா் சங்கத்தினா் வழங்கினா். பின்னா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் வளா்மதி , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளா் பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.