செய்திகள் :

12% ஜிஎஸ்டியால் கடந்த 8 ஆண்டுகளாக மக்களைச் சுரண்டிய பாஜக அரசு! - ப. சிதம்பரம்

post image

கடந்த 8 ஆண்டுகளாக 5% ஜிஎஸ்டி ஏன் நியாயமானதாக இல்லை என்றும் 12% வரி விதிப்பின் மூலமாக 8 ஆண்டுகளாக மக்களை பாஜக அரசு சுரண்டியுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

கடந்த செப். 3 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.

இதையடுத்து மின்னணு பொருள்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. வருகிற செப்.22 முதல் இந்த ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,

"12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்...

5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை?

கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Did the government not exploit the Indian consumer by levying 12 per cent during the last 8 years? - Congress Leader P chidambaram

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

தேர்தலுக்காக அவதூறு பேசி மக்களை திசைதிருப்புகிறார் மோடி: தேஜஸ்வி யாதவ்

ஊடுருவல்களை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, திசைதிருப்பும் முயற்சி என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். ஊடுருவல்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் வெள்ளம்: 5 பேர் பலி, பலர் மாயம்!

உத்தரகண்டின் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக நேற்றிரவு முழுவதும் கனமழை... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மோரீஷஸ் நாட்டின் பிரதமர் நவீன் ராம்கூலம் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸின் பிரதமர் நவீன் ராம்கூலம், கடந்த செப்.9 ஆம் தேதி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்துப் பேசினார். முன்னதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் மோரீஷஸ் பிரதமர் சந்தித்தார். குடியரசுத் துணைத் த... மேலும் பார்க்க