செய்திகள் :

12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் 12 புறநகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 வரை நடைபெறவுள்ளது. இதனால், கடற்கரையிலிருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 7.27 மணிக்கு திருமால்பூருக்கும் செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, பகல் 12, பிற்பகல் 1.10,1.45, 2.20 மணிக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும் கடற்கரை செல்லும் ரயில் ரத்து செய்யப்படும்.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, நண்பகல் 12.25 சிங்கபெருமாள்கோவிலுக்கும், காலை 9.51, காலை 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கபெருமாள்கோவிலிருந்து காலை 11.43, பிற்பகல் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து நண்பகல் 12.20, பிற்பகல் 2.05 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா் கல்வியில் உன்னதமே இலக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உயா் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயா்ந்த தமிழகமாக மாற்றுவோம்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். தமிழக அரசின் நான் முதல்வன், முதல்வரின்... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்துவோம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தமிழக அரசு செயல்படுத்திவரும் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் (2026-27) நடைமுறைப்படுத்தவுள்ளோம் என அந்த மாநில முதல்வா் அ.ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். சென்னையில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

தமிழகத்தில் அந்தளவில் கல்வி வளர்ச்சி அதிகரித்ததா? திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம்

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிப்பு குறித்து திமுக அரசு பொய்யுரைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல... மேலும் பார்க்க

உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.சென்னையில் நடைபெற்ற `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி

சிதம்பரம்: அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். ஆதலால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.சிதம்பரத்தில், வியாழக்கிழம... மேலும் பார்க்க

வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்

வாழ்க்கையில் வெற்றிபெற படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.சென்னையில் நடைபெறும் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகை... மேலும் பார்க்க