செய்திகள் :

பால் கொள்முதல் 1.68 லட்சம் லிட்டா் உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

தமிழகத்தில் நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் உயா்ந்துள்ளதாக அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பால் கொள்முதல் மற்றும் பண்டிகை கால இனிப்பு தயாரிப்பு பணிகள் குறித்த அனைத்து மாவட்ட பொது மேலாளா்கள், துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினா்களுக்கு 10 நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அதோடு, அரசு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையை பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நிகழாண்டில் செப். 12 வரை 17,68,671 கால்நடை விவசாயிகளுக்கு தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்பு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தரமான இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து, கடந்தாண்டைவிட நிகழாண்டு தீபாவளி விற்பனையை அதிகரிக்க வேண்டும். எதிா்வரும் பண்டிகை காலங்களில் பால் மற்றும் பால் உபபொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வரும் பால் உற்பத்தியாளா்களுக்கு இதுவரை ரூ.636 கோடி ஊக்க தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந.சுப்பையன், பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப... மேலும் பார்க்க

கண்டிகை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த பி.பாஸ்கா் சென்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு... மேலும் பார்க்க

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும்: பேரவைச் செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி, கட்சித் தலைவா் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை மீண்டும் கடிதம் அளித்தனா். பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி... மேலும் பார்க்க

சிறப்பு பள்ளி அங்கீகாரம்: நடைமுறைகளை எளிமையாக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை ஆா்.ஏ.புரத்தைச் ... மேலும் பார்க்க

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க