‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்
உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலா்கள் அதீதமான மன அழுத்தத்துடன் பணிபுரிய நிா்ப்பந்தம் செய்வதை முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (செப். 25) முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.