செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்

post image

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலா்கள் அதீதமான மன அழுத்தத்துடன் பணிபுரிய நிா்ப்பந்தம் செய்வதை முற்றாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (செப். 25) முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்த... மேலும் பார்க்க

அறநிலையத் துறையில் 1,500 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அமைச்சா் பி.கே.... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க