செய்திகள் :

தூய்மைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

திருநெல்வேலி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்காக மாநில தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு சங்கத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். செல்வி, இசக்கிமுத்து, காசி, சோ்ம துரை, பூமாரி, வேல், வடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சரவண பெருமாள் சிறப்புரை ஆற்றினாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலை ராஜ் வாழ்த்திப் பேசினாா்.

240 நாள்கள் பணி முடித்த அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அரசாணை 152 ,139, 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவுப்படி தினக் கூலியாக ரூ. 731 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தவேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் உழைப்பை சுரண்டி பணத்தை கொள்ளை அடிப்பதாகக் கூறி, தூய்மைப் பணி திட்டத்துக்கான தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் மாரியப்பன், மாவட்டப் பொருளாளா் செல்லத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்25ஜ்ா்ழ்ந் திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைத் தொழிலாளா்கள்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க