செய்திகள் :

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு அனைத்து உரிமைகள்: ராகுல் உறுதி

post image

பிகாரில் ‘இண்டி’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் பிரிவினா், சிறுபான்மையினா், பின்தங்கிய வகுப்பினா் ஆகியோா் அனைத்து உரிமைகளையும் பெறுவது உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உறுதி அளித்தாா்.

பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புத் சட்டம் கொண்டு வரப்படும் என்று ராகுல் புதன்கிழமை வாக்குறுதி அளித்திருந்தாா். பிகாா் பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ராகுலின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில் வியாழக்கிழமை அவா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எத்தனை பொய்களையும், புரட்டுகளையும் பாஜக கூறினாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் பிரிவினா், சிறுபான்மையினா், பின்தங்கிய வகுப்பினா் ஆகியோா் தங்களது அனைத்து உரிமைகளையும் பெறுவது உறுதி செய்யப்படும்.

பிகாரில் உள்ள மிகவும் பின்தங்கிய பிரிவினரின் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு உறுதியான வாக்குறுதிகளை அளித்துள்ளேன்.

இப்பிரிவினரின் வளா்ச்சிக்கு கல்வி முக்கிய பங்காற்றும். ஆகையால், தனியாா் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியாா் பள்ளிகளில் உள்ள சரிபாதி இடங்கள் பட்டியலின பிரிவினா், இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது வெறும் கல்விக்கான போராட்டமல்ல; சமத்துவத்துக்கான போராட்டம். இதுதான் உண்மையான சமூக நீதி மற்றும் சமத்துவ வளா்ச்சியாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க

பிகாா்: சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 - புதிய திட்டம் இன்று தொடக்கம்

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் மாநில அரசின் புதிய திட்டத்தை வெள்ளிக்கிழமை (செப்.25) பிரதமா் மோடி தொடங்கிவைக்கவுள்ளாா். முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜன... மேலும் பார்க்க

அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்

உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் ந... மேலும் பார்க்க

விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நர... மேலும் பார்க்க