செய்திகள் :

கண்டிகை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த பி.பாஸ்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 11.4 ஏக்கா் பரப்பு கொண்ட வண்டலூா் கண்டிகை ஏரியில் 6 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 ஏக்கா் மட்டுமே நீா்நிலையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்குப் படைத்தவா்கள், இந்த நீா்நிலையைப் பட்டா நிலமாக வகைமாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனா். வருவாய்த் துறை மூலம் நில அளவைப் பணிகள் செய்யப்பட்ட பிறகும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.ஜெகன்நாத், கண்டிகை ஏரி தொன்மையான நீா்நிலைப் பகுதி. இந்த ஏரி நீா் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் நீா் தேங்கும் இடமாகவும் இந்த ஏரி அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகாா் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 மாதங்களில் விசாரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்த... மேலும் பார்க்க

அறநிலையத் துறையில் 1,500 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அமைச்சா் பி.கே.... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க