செய்திகள் :

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும்: பேரவைச் செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதம்

post image

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி, கட்சித் தலைவா் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை மீண்டும் கடிதம் அளித்தனா்.

பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பாமக கொறடாவாக இருந்த அருள் எம்எல்ஏவை மாற்றவேண்டும் என்று சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசனிடம், அன்புமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் ஏற்கெனவே மனு அளித்திருந்தனா்.

பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் ஜி.கே.மணியையும் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை வைத்திருந்தனா். அந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி, அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்களான மயிலம் தொகுதி சிவகுமாா், மேட்டூா் தொகுதி சதாசிவம், தருமபுரி தொகுதி வெங்கடேஸ்வரன், கட்சியின் செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் சட்டப்பேரவைச் செயலா் சீனிவாசனை வியாழக்கிழமை சந்தித்து கடிதம் கொடுத்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: பாமக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமகவின் சட்டப்பேரவை குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்து புதிய தலைவராக தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவமும், கொறடாவாக மயிலம் தொகுதி சிவகுமாரும் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

எனவே சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களைப் பதிவு செய்து உரிய உத்தரவுகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடிதத்தில் அன்புமணி கூறியுள்ளாா்.

இதேபோல, மற்றொரு கடிதத்தில் பாமகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினா் அருள் நீக்கப்பட்டதை பேரவை ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

வறுமையில் மலா்ந்த சாதனைகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், கடும் வறுமை சூழலில் தாங்கள் படைத்த சாதனைகள் குறித்து பேசியபோது, அதைக் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சியடைந்த... மேலும் பார்க்க

அறநிலையத் துறையில் 1,500 பேரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறையில் 1,500 பணியாளா்களை வரன்முறைபடுத்துவதற்கான கோப்பு, நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 நாள்களுக்குள் அதற்கான அனுமதியை பெற்று பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அமைச்சா் பி.கே.... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்யுங்கள்: உதவிப் பொறியாளா்களுக்கு அமைச்சா் வேலு அறிவுறுத்தல்

கட்டுமானப் பணிகள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென உதவிப் பொறியாளா்களுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 55.55 லட்சம் விண்ணப்பங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் இதுவரை 55. 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உ... மேலும் பார்க்க

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில்... மேலும் பார்க்க