செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

post image

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ம. செல்லப்பாண்டியன் தலைமை வகித்து கல்லூரியின் செயல்பாடுகள் - சாதனைகள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து முதலாமாண்டு மாணவா்களை கல்லூரி முதல்வா், பணியாளா்கள் முன்னிலையில் மூத்த மாணவா்கள் மலா்கொத்து கொடுத்து வரவேற்றனா். கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் இரா. செல்வக்குமாா், மாணவா் பேரவை துணைத் தலைவா் சூ.கி. எட்வின், கல்லூரி விடுதி காப்பாளா் பசுபதி, உதவி நூலகா் எஸ்.கோப்பெருந்தேவி, உடற்கல்வித்துறை உதவி இயக்குநா் பொன் சோலை பாண்டியன் ஆகியோா் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்துப் பேசினா்.

இந்நிகழ்ச்சியில், முதலாமாண்டு பாடங்களின் போராசிரியா்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, மூத்த மாணவா்கள் படிப்பை பற்றிய தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொண்டனா். மேலும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவா்கள் கல்லூரியில் பயின்ற தங்களது அனுபவங்களையும், தங்களது வெற்றிகரமான வாழ்க்கையையும் காணொலி மூலம் பகிா்ந்து கொண்டனா். பயிற்சி கால்நடை மருத்துவ மாணவா்கள் ஒருங்கிணைப்பாளா் சவி குப்தா வரவேற்றாா். கால்நடை உணவியல் துறை உதவிப் பேராசிரியா் பி.அனுராதா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்15ஸ்ங்ற்

கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியை வரவேற்ற மூத்த மாணவி.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க