செய்திகள் :

சிறப்பு பள்ளி அங்கீகாரம்: நடைமுறைகளை எளிமையாக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஆா்.ஏ.புரத்தைச் சோ்ந்த ஆனந்த் ஜெகதீசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க தமிழக அரசின் 5 துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. அதன்பிறகே, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரிடம் இப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும். 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த அங்கீகாரமும் வழங்கப்படும்.

சிறப்பு பள்ளி அங்கீகாரத்துக்கு கட்டட உறுதித்தன்மை, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தடையில்லாச் சான்று உள்பட 5 விதமான துறைகளில் சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. இதனால், அங்கீகாரம் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நீண்ட காலம் வீணாகிறது. அங்கீகாரம் இல்லாமல் நன்கொடை, மானியம் எதுவும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.ஜோதிகா, முதலீட்டாளா்கள் தொழில் துறையில் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தியுள்ளது.

அதுபோல் தமிழக அரசும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், ஒற்றைச் சாளர முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுதொடா்பாக பதிலளிக்க 12 வார கால அவகாசம் வேண்டும் என கோரினாா். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு உத்தரவிட்டனா்.

எஸ்ஐ மீது தாக்குதல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில் காவல் உதவி ஆய்வாளரை (எஸ்ஐ) தாக்கியதாக காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பதி, திருக்குடைகள் ஊா்வலம் கடந்த 22-ஆம் தேதி சென்னை பூக்கடை பகுதி வழியாகச் சென்றது. அப்போது, அந்தப... மேலும் பார்க்க

கண்டிகை ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

கண்டிகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த பி.பாஸ்கா் சென்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளில் தொடரும் நெருக்கடி, நிா்ப்பந்தம் வியாழக்கிழமை புறக்கணித்ததாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு... மேலும் பார்க்க

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும்: பேரவைச் செயலரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சட்டப்பேரவை பாமக குழுத் தலைவா் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி, கட்சித் தலைவா் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை மீண்டும் கடிதம் அளித்தனா். பாமக நிறுவனா் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி... மேலும் பார்க்க

பால் கொள்முதல் 1.68 லட்சம் லிட்டா் உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்

தமிழகத்தில் நிகழாண்டில் 1.68 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் உயா்ந்துள்ளதாக அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா். தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள... மேலும் பார்க்க

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க