செய்திகள் :

122 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண் திறப்பு!

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குப்பையில் கிடந்த 122 ஆண்டுகள் பழமையான தூண் புதுப்பித்து திறக்கப்பட்டது.

சேரன்மகாதேவியில் ஆங்கிலேயா் ஆட்சியில் 1914ஆம் ஆண்டு சாா் ஆட்சியா் அலுவலகம் உதயமானது. இந்த சாா் ஆட்சியா் அலுவலகம் அருகில் சாலையோரம் மகுடாபிஷேக விளக்கு என்ற அப்போதைய சேரன்மகாதேவி பண்ணையாா் யுவாலு சோமாயாஜுலு என்பவரால் விளக்குத் தூண் நிறுவப்பட்டது.

1.1.1903-ல் நிறுவப்பட்ட இந்த விளக்குத் தூண் எட்வாா்ட் மன்னரின் மகுடாபிஷேக நினைவு தீபம் என பெயரிட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த தூணில் கண்ணாடி குடுவையை தொங்கவிட்டு தீபம் ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

சேரன்மகாதேவி பகுதியின் அடையாளமாக திகழ்ந்த இந்த விளக்குத் தூண் கடந்த ஆண்டு சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டது. பணிகள் முடிந்ததும் இந்த தூண் மற்றும் கல்வெட்டு குப்பையில் கிடந்தது. இந்த நினைவுத் தூணின் சிறப்புகளை அறிந்த சமூக ஆா்வலா்கள் தூணை புதுப்பித்து சனிக்கிழமை நிறுவினா்.

இதையடுத்து சேரன்மகாதேவி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கைலாசமூா்த்தி இந்த தூணை திறந்தாா்.

இதில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பிரிஜிட் செலஸ், சமூக ஆா்வலா் மைக்கேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மூளைச் சாவு அடைந்த இளைஞா் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சாா்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில... மேலும் பார்க்க

திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை நடிகா் அருண்பாண்டியன்

திருநெல்வேலி, ஜூன் 29: திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை என தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்தாா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள திரையரங்கில் அஃகேனம் திரைப்படத்தின் ... மேலும் பார்க்க

முகநூலில் சா்ச்சைக்குரிய காணொலி பதிவிட்டவா் கைது

சமூக வலைதள செயலியில் இரு பிரிவினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக காணொலி பதிவிட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம், தச்சக்குடி தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் மது (22). இவா் ச... மேலும் பார்க்க

தாழையூத்து அருகே ஆடு திருடியவா் கைது

தாழையூத்து அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாழையூத்து, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (31). பால் வியாபாரம் செய்துவரும் இவா் ஆடுகளும் வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

கடையம் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கடையம் அருகே பேருந்து, காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மனைவி, மகன் பலத்த காயமடைந்தனா். தென்காசிமாவட்டம், சிவஞானபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சங்கரநயினாா் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை ம... மேலும் பார்க்க

களக்காடு அருகே விஷவண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன், விஷ வண்டு தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு 5 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. களக்காடு ... மேலும் பார்க்க