செய்திகள் :

13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா

post image

தஞ்சாவூா் மாநகரிலுள்ள 13 கோயில்களில் முத்துப் பல்லக்கு திருவிழா வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை நடைபெற்றது.

தஞ்சாவூரில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனாா் குருபூஜையையொட்டி முத்துப் பல்லக்கு விழா நடைபெறும்.

இதன்படி, கீழவாசல் வெள்ளை விநாயகா், குறிச்சித் தெரு சுப்பிரமணிய சுவாமி, ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி, மகா்நோன்புச் சாவடி சின்ன அரிசிக்காரத் தெரு பழனியாண்டவா், கீழவாசல் உஜ்ஜயினி காளி கோயில் தெரு கல்யாண கணபதி, தெற்கு வீதி கமலரத்ன விநாயகா், மேலராஜ வீதி திருஞானசம்மந்தா், வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி, சிரேஸ்சத்திர சாலை வடபத்ரகாளி அம்மன், காமராஜா் சந்தை செல்வ விநாயகா், கொடிமரத்து மூலை பாலதண்டாயுதபாணி, ரெட்டிபாளையம் சாலை வெற்றி முருகன், தனலட்சுமி நகா் வலம்புரி விநாயகா் ஆகிய கோயில்களில் இருந்து வியாழக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகா், முருகப் பெருமான் எழுந்தருளினா்.

இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு, மாமா சாகிப் மூலை பகுதிக்கு வந்தன. பின்னா் ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை வலம் சென்றன. இதைக் காண ஏராமான பக்தா்கள் திரண்டனா்.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க